Thursday, December 19, 2013

உள் உழற்றும் நினைவசை

ஞாயிற்றின் இளங்கதிர் மழலையின் மொழிபோல் இதமாக இருந்தது. புதுமண் சட்டியில் குப்பைமேனி இலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டிய சாறு வெளியில்படும் படி வைக்கப்பட்டிருந்தது. மனதில் வேதனையுடன் ஒரு தந்தையின் உள்ளம் பொருமிகொண்டிருந்து. சட்டியில் இருந்த பச்சிலை மருந்தை முகர்ந்து பார்த்து, இதை என் மகள் எப்படி குடிப்பாள் என்று வேதனயோடு கலங்கி கண்ளோடு அமர்ந்திருந்தார். சுற்றியிருந்த அவருடைய உறவினர்கள் இப்படி கூடவா இருப்பார்கள் பெண் மேல் பாசம் இருக்க வேண்டியதுதான் நாங்கள் என்ன விஷத்தையா கொடுக்கிறோம் என்று திட்டிகொண்டே சற்று சூடுகண்ட மருந்தை எடுத்துக்கொடுத்தனர். அவள் குடிடத்தபோது அவள் தந்தை அழுத அழுகை, அந்த பாசம் மறக்கமுடியாத நினைவு. எப்படி மறக்கமுடியும் ஒரு தந்தை பிம்பம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரொரு விதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கும்.எங்களுக்கு அமைந்த அப்பா ஒரு நல்ல தோழனாய், வழிகாட்டியாய்,ஆசானாய் அனைத்துமாய் இருந்தவர்.அவர் எங்களுக்குள் ஏற்படுத்தி சென்ற சலனங்கள் சொல்லி மளாது. 2000 த்தில் எங்களைப் புறவயமாக பிரிந்தாரே ஒழிய எங்கள் ஆன்மா இருக்கும் வரை அவர் நினைவுகள் அழியாது.

அப்பாவின் நினைவுகள் தொடரும்...

Tuesday, October 30, 2012

செல்லியம்மன் திருவிழா























அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.

வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். 

Friday, October 26, 2012

ஊரும் பேரும்...


ஒக்கூர் என்று அழைக்கப்படும் ஒக்கநாடு கீழையூர் தஞ்சையிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள ஊர். ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. அங்கு விவசாயம் முக்கியத் தொழில். அந்த ஊரின் தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.